துபாய் என்ற கனவு தேசம் கண்களுக்கு முன்னால் சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரிசையில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் காணாமல் போய்விட்டது. இந்த தேசத்தின் தற்போதைய நிலை யாருமே எதிர்பார்த்திராதது. ஆனாலும் இது ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதின் ஓரத்தில் இருக்கிறது.
துபாயின் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் “NOL" என்ற ஒற்றை அட்டை மூலம் பயணத்திற்கான கட்டணம் செலுத்த வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேருந்துகள், தொடருந்துகள், நீர்நிலைப் பேருந்துகள் என அனைத்திற்கும் இந்த அட்டையே போதும். இதனை அங்கங்கே ரீ-சார்ஜும் செய்துகொள்ளலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கான குறைந்த பட்சக் கட்டணம் 2 திர்ஹம் 10 ஃபில்ஸ் (அதாவது 30 ரூபாய்). முழுதும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம் செய்வது அதி ஆனந்தம்.
அப்படி நான் நேற்று போய் பார்த்த படம் தான் “குட்டி” - feel my love.
தெள்ளிய நீரோடையான கதையை அங்கங்கே தூவி இருக்கும் காட்சிப்பதிவுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பானதாகி இருக்கும். ஆனால் நடக்கவில்லை.
மித்ரன் இயக்கம் என்றதும் அதே பழைய தெலுகு ”ஆர்யா” படம், ஆனால் நன்றாக சொல்லி இருப்பார் என நினைத்து மூன்று மணிக்கே போய் டிக்கட் வாங்கியதற்கு என்னை நானே கண்டபடி திட்டிக் கொண்டேன்.
ஸ்ரியா என்ற பெண்ணையும் ஒரு பாடலில் அழகாய்க் காட்ட முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அட்டகாசமாய் ஜோதிகா நடித்திருக்க வேண்டிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெளிய வைக்கிறார்.
இன்னொரு அம்சம் இசை.. தேவி ஸ்ரீ ப்ரசாத்துக்கு என்ன வந்துச்சோ.. எங்கேயோ கேட்டது போன்ற பாடல்கள்.
தனியே தெரிவது தனுஷ் மட்டும் தான். மனுசன் காதலைச் சொல்லிவிட்டு சிரிக்கும்போதும், அவள் திருமணத்தின் போது என்னுடைய காதலை நீ உணரவில்லையா எனும்போதும் உதடுகள் துடிக்க அழுகைக்கான அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு வருகிறார்.
பழைய சினிமாக்களைப் போல் அங்கங்கே கதாநாயகன் வெல்வதும், அவ்வப்போது வில்லன் வெல்வதும் புளித்துப்போய்விட்டது.
கடைசி சண்டைக்காட்சியில் நின்று கொண்டிருக்கும் இரும்பு ட்ரம்மில் காலை வைத்து வில்லனை அடிக்கும்போது அவர் கையைப் பிடிப்பதும், பிறகு தலையால் அடிப்பதும், தலையைப் பிடித்தால் கையால் அடிப்பதும் நல்ல சிந்தனை. ஆனால் ஒல்லிப்பிச்சான் இப்படி அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை ;)
பாவாடை தாவணியில் அம்மணி வரும்போது அம்சமாய் இருக்கிறார். படத்தின் பாடல்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.
திரைக்கதையில் தூக்கி நிறுத்தி இருக்கலாம். ஆனால் இயக்குனர் விட்டுவிட்டார்.
நல்ல படமாகக் கூடிய தகுதிகள் இருந்தும் நீளம் தாண்டுதலில் ஓடாமலே தாண்டியதைப் போன்று இருக்கிறது.
குட்டி திரைப்படம் - விமர்சனம் செய்ய தேவை இல்லை.
சனி, 23 ஜனவரி, 2010
சனி, 9 ஜனவரி, 2010
தமிழ் படம் - பாடல் விமர்சனம்
”தமிழ் படம்” என்று அழகிரி குடும்பத்திலிருந்து அடுத்த படம் வருகிறது..
”சென்னை 600028” புகழ் சிவா நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று கேட்டேன்.
புது இசையமைப்பாளர் கண்ணன் ரணகளம் செய்திருக்கிறார். படமும் பாடல்கள் போல் இருந்தால் 2010ம் முதல் மாபெரும் வெற்றிப்படமாய் அமையும்.
பாடல்கள் விமர்சனம் போகலாமா...??
முதல் பாடல் ஓ மகசீயா
ஹரிஹரன், ஸ்வேதாவின் தேன் குரல்களும், ரம்யமான இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. பாடல் வரிகள் எல்லாமே தமிழ்ப் படங்களில் வந்து நமக்கு புரியாத வரிகள் தான். ஆனால் பாடல் இனிமை..
இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ??
ஹம்சத்வானி ராகம் மெல்லியதாய் இழையோடுவதாகப் பட்டது. இசை தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இரண்டாம் பாடல் குத்து விளக்கு
சும்மா குத்து குத்துன்னு குத்துறாங்க உஜ்ஜயினி.. என்னமா பாட்டுங்குறீங்க,.... மெல்லிய வீணையோட ஆரம்பிக்கும் போது நல்ல க்ளாசிக்கல் சாங்க்னு நினைச்சா சரியான குத்துப்பாட்டு. அந்த வீணை கூட தர்பாரி கனடாவா இருக்கலாம்.
மூனாம் பாட்டு பச்ச மஞ்ச செவப்பு தமிழன்
சும்மா விஜய் படத்து ஓபனிங்க் சாங்க் மாதிரி சல்லுனு ஏறுது... முகேஷ் பாடி இருக்காரு... பயபுள்ள கலக்கி இருக்காரு...எல்லா கலரும் சொல்லி நம்மளை சிரிக்க வச்சிடுறாங்க.. இதுக்கு நம்ம ஷிவா எப்படி ஆடப்போறாரோன்னு நினைச்சா காமெடியா இருக்கு..
சுனாமியோட பினாமி, ஏழைகளை ஏத்திவிடும் லிஃப்ட், மெதுவடை, தயிர்வடை தத்துவம்.. கலக்கி இருக்காரு பாடலாசிரியர்.. ;)
நாலாம் பாட்டு ஒரு சூறாவளி
எலெக்ட்ரிக் பேஸும் கித்தாரும் விளையாடி இருக்கு... இந்த சீன்ல காரை விட்டு கண்ணாடியோட ஷிவா இறங்கினார்னா எல்லாரும் கொல்லுனு சிரிச்சிடுவோம். சங்கர் மகா தேவன் கலக்கி இருக்காரு...
ஐந்தாம் பாட்டு தீம் மியூசிக்
என்ன காமெடின்னா ரொம்ப சீரியஸா இருக்கு இந்த தீம் மியூசிக். கலக்கலா இருக்கும் படத்தில..
மொத்தமா சொல்லணும்னா ஸ்பூஃப் வகை சினிமா தமிழ்ல அவ்வளவா இல்லை... சத்யராஜ் பண்ணி இருக்கார் ”மகா நடிகன்”ல.. ஆனா இந்த படம் முழு நீள நகைச்சுவையா இருக்கும்னு தோணுது..
கலக்குங்க மக்கா... இனிமே முட்டாள் தனமா படமெடுக்கிறவங்கல்லாம் பயப்படணும்.. முக்கியமா விஜய் அஜித் திருந்தணும்... ;)
”சென்னை 600028” புகழ் சிவா நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று கேட்டேன்.
புது இசையமைப்பாளர் கண்ணன் ரணகளம் செய்திருக்கிறார். படமும் பாடல்கள் போல் இருந்தால் 2010ம் முதல் மாபெரும் வெற்றிப்படமாய் அமையும்.
பாடல்கள் விமர்சனம் போகலாமா...??
முதல் பாடல் ஓ மகசீயா
ஹரிஹரன், ஸ்வேதாவின் தேன் குரல்களும், ரம்யமான இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. பாடல் வரிகள் எல்லாமே தமிழ்ப் படங்களில் வந்து நமக்கு புரியாத வரிகள் தான். ஆனால் பாடல் இனிமை..
இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ??
ஹம்சத்வானி ராகம் மெல்லியதாய் இழையோடுவதாகப் பட்டது. இசை தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இரண்டாம் பாடல் குத்து விளக்கு
சும்மா குத்து குத்துன்னு குத்துறாங்க உஜ்ஜயினி.. என்னமா பாட்டுங்குறீங்க,.... மெல்லிய வீணையோட ஆரம்பிக்கும் போது நல்ல க்ளாசிக்கல் சாங்க்னு நினைச்சா சரியான குத்துப்பாட்டு. அந்த வீணை கூட தர்பாரி கனடாவா இருக்கலாம்.
மூனாம் பாட்டு பச்ச மஞ்ச செவப்பு தமிழன்
சும்மா விஜய் படத்து ஓபனிங்க் சாங்க் மாதிரி சல்லுனு ஏறுது... முகேஷ் பாடி இருக்காரு... பயபுள்ள கலக்கி இருக்காரு...எல்லா கலரும் சொல்லி நம்மளை சிரிக்க வச்சிடுறாங்க.. இதுக்கு நம்ம ஷிவா எப்படி ஆடப்போறாரோன்னு நினைச்சா காமெடியா இருக்கு..
சுனாமியோட பினாமி, ஏழைகளை ஏத்திவிடும் லிஃப்ட், மெதுவடை, தயிர்வடை தத்துவம்.. கலக்கி இருக்காரு பாடலாசிரியர்.. ;)
நாலாம் பாட்டு ஒரு சூறாவளி
எலெக்ட்ரிக் பேஸும் கித்தாரும் விளையாடி இருக்கு... இந்த சீன்ல காரை விட்டு கண்ணாடியோட ஷிவா இறங்கினார்னா எல்லாரும் கொல்லுனு சிரிச்சிடுவோம். சங்கர் மகா தேவன் கலக்கி இருக்காரு...
ஐந்தாம் பாட்டு தீம் மியூசிக்
என்ன காமெடின்னா ரொம்ப சீரியஸா இருக்கு இந்த தீம் மியூசிக். கலக்கலா இருக்கும் படத்தில..
மொத்தமா சொல்லணும்னா ஸ்பூஃப் வகை சினிமா தமிழ்ல அவ்வளவா இல்லை... சத்யராஜ் பண்ணி இருக்கார் ”மகா நடிகன்”ல.. ஆனா இந்த படம் முழு நீள நகைச்சுவையா இருக்கும்னு தோணுது..
கலக்குங்க மக்கா... இனிமே முட்டாள் தனமா படமெடுக்கிறவங்கல்லாம் பயப்படணும்.. முக்கியமா விஜய் அஜித் திருந்தணும்... ;)
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
வாழ்த்துகள் பீகார்
இந்திய மாநிலங்களிலேயே பின் தங்கிய மாநிலம் என்றால் அது பீகார் என்று எடுத்தவுடன் சொல்லிவிடுவார்கள். அதாவது லாலு பிரசாத் யாதவ் ஆண்டு வந்த காலங்களில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாது, வக்கில்லாத வகையாக, வாழ்ந்து வந்த மக்களுக்கு நிதிஷ் குமார் மூலம் விடிவு பிறந்திருக்கிறது.
ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கிறது.
அதாவது இந்தியாவின் தொழிற்துறையில் முன்ணணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தை விட 0.02% குறைவு. (11.05% குஜராத்).(இதே சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 8.49%)
இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், 2003-04 ஆண்டில் பிகாரின் வளர்ச்சி விகிதம் (-) 5.15%.
இதிலேர்ந்து நல்ல நிர்வாகம் இருந்தால் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம் என்பது புலனாகிறது.
வாழ்த்துகள் பீகார்.
ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கிறது.
அதாவது இந்தியாவின் தொழிற்துறையில் முன்ணணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தை விட 0.02% குறைவு. (11.05% குஜராத்).(இதே சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 8.49%)
இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், 2003-04 ஆண்டில் பிகாரின் வளர்ச்சி விகிதம் (-) 5.15%.
இதிலேர்ந்து நல்ல நிர்வாகம் இருந்தால் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம் என்பது புலனாகிறது.
வாழ்த்துகள் பீகார்.
சனி, 19 டிசம்பர், 2009
இரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)
திரைப்படங்கள் நம் வாழ்வின் செய்ய முடியாத எண்ணங்களை செய்யக்கூடிய மனிதனாக நம்மை உணரச்செய்பவை என்ற எண்ணங்கள் எப்போதும் என் மனதில் இருக்கும்.
வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெறும் ஹீரோக்கள் ஃபேண்டஸி ட்ரீம்களின் பிரதிபலிப்புகள்.
நமது காலங்களில் நாம் செய்ய இயலா செயல்களை ஹீரோக்கள் செய்யும்போது நமக்கு மிகவும் பிடித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய்.
நாலு பாட்டு, நாற்பது பேருக்கு அடி, ரெண்டு சோக காட்சி... எல்லாம் இருக்கும் படம் வேட்டைக்காரன்.
அனுஷ்கா அவ்வளவு அழகு... ஆனா டான்ஸ் வரல... நடிப்பு வரல... சும்மா பொம்மை மாதிரி வந்து போறாங்க...
விஜய் பையன் அழகு...சூப்பரா இருக்கான். தத்தி மாதிரி பையன் விஜயையே அவங்க அப்பா இம்புட்டு தூரம் கொண்டு வந்திருக்கார். அவர் பையன் இன்னும் அழகா இருக்கான். பார்க்கலாம்...
படத்துல இன்னொரு விஷயம் வில்லன்கள். வேதநாயகம்னா பயம்னு சொல்லும் போது நல்லா இருக்கு.
ஆனா தேவையில்லாம கேரக்டருங்க வந்து போறது ரொம்ப ஓவரு.. கூடப்படிக்கிற பொண்ணுக்கு அண்ணனாத்தான் இருக்கணும்னு ஒரு விதி வேற... இந்த ஆபாசக் கலாச்சாரத்தை (நன்றி: மனுஷ்யபுத்திரன்) என்ன செய்வது??
காமெடிக்குன்னு யாரையும் ஸ்பெஷலா போடல.. ஏன்னா விஜய் பஞ்ச் டையலாக்கே போதும்னு நினைச்சிருப்பாங்க போல... இயக்குனருக்கு முதல் படம், தில், பாட்ஷா படங்களை அப்படியே மிக்ஸில அடிச்சு கொடுத்திருக்கார்.
வேட்டைக்காரன் - தமிழ் மனங்களில் வெற்றி நடை போடும்.. சீக்கிரமே சன் டி.வி.ல ;-)
இரண்டாம் திரைப்படம் - அவதார். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் பார்த்த அதே மன ஓட்டத்தில் போனால் அவதாரில் சிறப்பென்று எதுவும் இல்லை.. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தவிர..
கால் நடக்க முடியாத ஹீரோ, வேற்றுக்கிரகத்தின் மலைகளில் கிடைக்கும் அபூர்வ உலோகத்தை ஆட்டயைப் போடும் மனித இனத்தின் ரெப்ரசண்டேடிவ். அதுக்கு ஒரு சயிண்டிஸ்ட் கும்பல், செக்யூரிட்டி கும்பல், மிதக்கும் மலை, அபூர்வ உயிரினிங்கள்...
வாவ்... 3D எஃபக்ட்ல சும்மா அட்டகாசம் பண்ணி இருக்கார் இயக்குனர்.
மனித இனம் எப்படி இருந்திக்கும் சில காலங்களுக்கு முன் என்பதை நினைத்தாலெ மெய் சிலிர்க்கிறது. தலைவரின் பேச்சை தலைகீழாய் நின்றாவது முடிக்க ஆசைப்படும் கூட்டம்.
ஏகப்பட்ட வித்தியாசமான காட்சியமைப்புகள்.. கால் நடக்க முடியாத ஹீரோ கூடு விட்டு கூடு பாய்ந்து புதிய பிறவி எடுப்பதைப் போல இன்னொரு உடலில் புகுந்து மண்ணைக் காலால் தடவும் இடம் கவிதை...
வேற்றுக்கிரக பெண்ணுடன் காதலும், காமமும்...வாவ்... அழகான கவிதையை மூன்றாம் பரிமாணத்துடன் காட்டும் அழகு...
ஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டான ஸ்பெஷல் அழகு... மிருகங்கள்..அவைகளின் உதவி..
மனிதனின் ஆசை...அது என்றும் அடங்காது... ஆனால் ஆசை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் தருகிறது. வேறோர் உலகம் எப்படி இருக்கும், எப்படி சுவாசிக்கலாம்...எப்படி இருப்பார்கள்..??இதுபோன்ற கற்பனைக்கு உருவம் கொடுத்த இயக்குனருக்கும், கிராஃபிக்ஸ் வல்லுனர்களுக்கும், அதன் உழைப்பில் கலந்த ஒவ்வொருவருக்கும் சல்யூட்.
அழகான அந்த பைலட் பொண்ணுக்காக (Michelle Rodriguez) இன்னொரு தடவை பார்க்கலாம் ;-)
அவதார் - எஃபக்ட்ஸ்க்காக.
வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெறும் ஹீரோக்கள் ஃபேண்டஸி ட்ரீம்களின் பிரதிபலிப்புகள்.
நமது காலங்களில் நாம் செய்ய இயலா செயல்களை ஹீரோக்கள் செய்யும்போது நமக்கு மிகவும் பிடித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய்.
நாலு பாட்டு, நாற்பது பேருக்கு அடி, ரெண்டு சோக காட்சி... எல்லாம் இருக்கும் படம் வேட்டைக்காரன்.
அனுஷ்கா அவ்வளவு அழகு... ஆனா டான்ஸ் வரல... நடிப்பு வரல... சும்மா பொம்மை மாதிரி வந்து போறாங்க...
விஜய் பையன் அழகு...சூப்பரா இருக்கான். தத்தி மாதிரி பையன் விஜயையே அவங்க அப்பா இம்புட்டு தூரம் கொண்டு வந்திருக்கார். அவர் பையன் இன்னும் அழகா இருக்கான். பார்க்கலாம்...
படத்துல இன்னொரு விஷயம் வில்லன்கள். வேதநாயகம்னா பயம்னு சொல்லும் போது நல்லா இருக்கு.
ஆனா தேவையில்லாம கேரக்டருங்க வந்து போறது ரொம்ப ஓவரு.. கூடப்படிக்கிற பொண்ணுக்கு அண்ணனாத்தான் இருக்கணும்னு ஒரு விதி வேற... இந்த ஆபாசக் கலாச்சாரத்தை (நன்றி: மனுஷ்யபுத்திரன்) என்ன செய்வது??
காமெடிக்குன்னு யாரையும் ஸ்பெஷலா போடல.. ஏன்னா விஜய் பஞ்ச் டையலாக்கே போதும்னு நினைச்சிருப்பாங்க போல... இயக்குனருக்கு முதல் படம், தில், பாட்ஷா படங்களை அப்படியே மிக்ஸில அடிச்சு கொடுத்திருக்கார்.
வேட்டைக்காரன் - தமிழ் மனங்களில் வெற்றி நடை போடும்.. சீக்கிரமே சன் டி.வி.ல ;-)
இரண்டாம் திரைப்படம் - அவதார். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் பார்த்த அதே மன ஓட்டத்தில் போனால் அவதாரில் சிறப்பென்று எதுவும் இல்லை.. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தவிர..
கால் நடக்க முடியாத ஹீரோ, வேற்றுக்கிரகத்தின் மலைகளில் கிடைக்கும் அபூர்வ உலோகத்தை ஆட்டயைப் போடும் மனித இனத்தின் ரெப்ரசண்டேடிவ். அதுக்கு ஒரு சயிண்டிஸ்ட் கும்பல், செக்யூரிட்டி கும்பல், மிதக்கும் மலை, அபூர்வ உயிரினிங்கள்...
வாவ்... 3D எஃபக்ட்ல சும்மா அட்டகாசம் பண்ணி இருக்கார் இயக்குனர்.
மனித இனம் எப்படி இருந்திக்கும் சில காலங்களுக்கு முன் என்பதை நினைத்தாலெ மெய் சிலிர்க்கிறது. தலைவரின் பேச்சை தலைகீழாய் நின்றாவது முடிக்க ஆசைப்படும் கூட்டம்.
ஏகப்பட்ட வித்தியாசமான காட்சியமைப்புகள்.. கால் நடக்க முடியாத ஹீரோ கூடு விட்டு கூடு பாய்ந்து புதிய பிறவி எடுப்பதைப் போல இன்னொரு உடலில் புகுந்து மண்ணைக் காலால் தடவும் இடம் கவிதை...
வேற்றுக்கிரக பெண்ணுடன் காதலும், காமமும்...வாவ்... அழகான கவிதையை மூன்றாம் பரிமாணத்துடன் காட்டும் அழகு...
ஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டான ஸ்பெஷல் அழகு... மிருகங்கள்..அவைகளின் உதவி..
மனிதனின் ஆசை...அது என்றும் அடங்காது... ஆனால் ஆசை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் தருகிறது. வேறோர் உலகம் எப்படி இருக்கும், எப்படி சுவாசிக்கலாம்...எப்படி இருப்பார்கள்..??இதுபோன்ற கற்பனைக்கு உருவம் கொடுத்த இயக்குனருக்கும், கிராஃபிக்ஸ் வல்லுனர்களுக்கும், அதன் உழைப்பில் கலந்த ஒவ்வொருவருக்கும் சல்யூட்.
அழகான அந்த பைலட் பொண்ணுக்காக (Michelle Rodriguez) இன்னொரு தடவை பார்க்கலாம் ;-)
அவதார் - எஃபக்ட்ஸ்க்காக.
வியாழன், 17 டிசம்பர், 2009
குசும்பனுக்கு பிறந்தநாள்..
குசும்பன் என்ற இமயம் எங்களுடன் வாழ்வதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம்..
அன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
வாழ்த்துகள் குசும்பன்... ;-)
இப்படிக்கு,
சுபைர்
குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)
அமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
அன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
வாழ்த்துகள் குசும்பன்... ;-)
இப்படிக்கு,
சுபைர்
குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)
அமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
இனியவை 50 - வெண்பா 1
புது முயற்சியாக வெண்பாவில் 50 கவிதைகள் எழுத விருப்பம். தங்களின் ஆதரவு வேண்டும்..
முதல் வெண்பா இறை வாழ்த்து...
கடலாய் அறிவும் கருத்தால் செறிவும்
உடலால் பணிவும் படலாய் பணமும்
திடமாய் மனமும் கடமை நினைவும்
தருவாய் இறைவா எனக்கு!
முதல் வெண்பா இறை வாழ்த்து...
கடலாய் அறிவும் கருத்தால் செறிவும்
உடலால் பணிவும் படலாய் பணமும்
திடமாய் மனமும் கடமை நினைவும்
தருவாய் இறைவா எனக்கு!
சனி, 21 நவம்பர், 2009
குர்பான் - திரை விமர்சனம்
நேற்று மாலை நண்பர்களுடன் வெளியில் சென்ற வேளையில், சினிமா சிட்டி என்று புதிதாய் திறந்துள்ள மல்டிப்ளக்ஸ் பற்றிய பேச்சு வந்தது. என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்று போனால் அங்கே ”குர்பான்” என்ற ஹிந்தி திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. சைஃப் அலிகான் என்ற நடிகன் நடிப்பில் முன்னேறி வருபவர் என்ற வகையில் உன்னிப்பாக கவனித்து வருவதால் அந்த படத்திற்கு போக முடிவு செய்தோம்.
குர்பான் - திரைப்படத்தின் கதையொன்றும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. நியூயார்க் என்ற கத்ரினா கைஃப் திரைப்படம் போன்றதே.
புரபசர் அவந்திகாவுடன் புரபசர் இஹ்சானுக்கு காதல் பூக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.. இதுமாதிரிலாம் நமக்கு தோணவே இல்லையேன்னு நினைத்துக்கொண்டேன். (அப்படியே தோணியிருந்தாலும் டங்குவாரு அந்திருக்கும்)
அவந்திகாவை திருமணம் செய்ய விருப்பம் கேட்டு அவரின் அப்பாவிடம் பேசும் வசனங்கள் ஷார்ப்.
அமெரிக்கா போகும் இந்த குடும்பம் எதிர்வீட்டு இஸ்லாமிய குடும்பத்தாரை சந்திக்க நேர்கிறது. அந்த குடும்பம் முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளில் முழுக்க வேரூன்றி இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெண் தன்னை வேலை செய்ய அனுமதிப்பதில்லை என்பதை சொல்லும் வசனம் சிறப்பு.
இதிலே சம்பந்தமே இல்லாமல் விவேக் ஓபராய் ரியாஸ் மசூத் என்ற பெயரில். செய்தித் தொலைக்காட்சியில் கேமராமேன். ரியாஸ் மசூத் காதலைச் சொல்லும் காட்சி ஒரு கவிதை. Do you want me to go down on one knee.. :-)
விவேக் ஓபராயின் காதலி ஒரு குண்டுவெடிப்பில் இறந்து போகிறார். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் விவேக், போய் நிற்பது கரீனாவின் வீட்டில்.
இதே நேரம் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நபர்களில் முக்கியமானவர் சைஃப் அலிகான் என கரீனாவுக்கு தெரியவருகிறது.
இனி நடப்பவைகளை வெண்திரையில் காண்க..
திரைப்படத்தின் சிறப்பம்சம் இசை. சலீம் மெர்சண்ட் & சுலைமான் மெர்ச்சண்டின் இசை நம்மை இருக்கை நுனிக்கு கொண்டு வருகிறது. கரன் ஜோஹரின் கதை என்கிறார்கள். மனுசனுக்கு மக்களின் நாடித்துடிப்பு சரியா கிடைச்சிருக்கு..
இந்த திரைப்படம் என்னை உலுக்கிய இடங்கள்..
1. எவ்வளவு தான் படித்த பெண்களாய் இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தடுமாறிப் போகிறார்கள்.
2. Islamic Fundamentalist - இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3. கல்லூரியில் நடக்கும் விவாதத்தில் அமெரிக்கப் பெண் கேட்கும் கேள்விகள், அதற்கு விவேக் ஓபராயின் பதில்கள்.
4. ”ஆபா”வின் காரணங்கள்
5. அமெரிக்கர்களின் தொழில் ஈடுபாடு.. (சாகப்போவது தெரிந்தும் மற்றவர்களைக் காக்க நினைத்த வீரம் Agent Hayes..)
இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக குறைசொல்ல முடியாது என்றாலும் 9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறி இருக்கிறது.
நண்பர்களுக்கு..
இந்த படம் பார்த்தால், ஏற்றுக்கொள்வீர்கள், வெறுப்பீர்கள், சில விவாதங்களில் குழப்பமடைவீர்கள், சில விவாதங்கள் சூடேற்றும். ஆனால் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
குர்பான் - தியாகம்.
குர்பான் - திரைப்படத்தின் கதையொன்றும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. நியூயார்க் என்ற கத்ரினா கைஃப் திரைப்படம் போன்றதே.
புரபசர் அவந்திகாவுடன் புரபசர் இஹ்சானுக்கு காதல் பூக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.. இதுமாதிரிலாம் நமக்கு தோணவே இல்லையேன்னு நினைத்துக்கொண்டேன். (அப்படியே தோணியிருந்தாலும் டங்குவாரு அந்திருக்கும்)
அவந்திகாவை திருமணம் செய்ய விருப்பம் கேட்டு அவரின் அப்பாவிடம் பேசும் வசனங்கள் ஷார்ப்.
அமெரிக்கா போகும் இந்த குடும்பம் எதிர்வீட்டு இஸ்லாமிய குடும்பத்தாரை சந்திக்க நேர்கிறது. அந்த குடும்பம் முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளில் முழுக்க வேரூன்றி இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெண் தன்னை வேலை செய்ய அனுமதிப்பதில்லை என்பதை சொல்லும் வசனம் சிறப்பு.
இதிலே சம்பந்தமே இல்லாமல் விவேக் ஓபராய் ரியாஸ் மசூத் என்ற பெயரில். செய்தித் தொலைக்காட்சியில் கேமராமேன். ரியாஸ் மசூத் காதலைச் சொல்லும் காட்சி ஒரு கவிதை. Do you want me to go down on one knee.. :-)
விவேக் ஓபராயின் காதலி ஒரு குண்டுவெடிப்பில் இறந்து போகிறார். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் விவேக், போய் நிற்பது கரீனாவின் வீட்டில்.
இதே நேரம் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நபர்களில் முக்கியமானவர் சைஃப் அலிகான் என கரீனாவுக்கு தெரியவருகிறது.
இனி நடப்பவைகளை வெண்திரையில் காண்க..
திரைப்படத்தின் சிறப்பம்சம் இசை. சலீம் மெர்சண்ட் & சுலைமான் மெர்ச்சண்டின் இசை நம்மை இருக்கை நுனிக்கு கொண்டு வருகிறது. கரன் ஜோஹரின் கதை என்கிறார்கள். மனுசனுக்கு மக்களின் நாடித்துடிப்பு சரியா கிடைச்சிருக்கு..
இந்த திரைப்படம் என்னை உலுக்கிய இடங்கள்..
1. எவ்வளவு தான் படித்த பெண்களாய் இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தடுமாறிப் போகிறார்கள்.
2. Islamic Fundamentalist - இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3. கல்லூரியில் நடக்கும் விவாதத்தில் அமெரிக்கப் பெண் கேட்கும் கேள்விகள், அதற்கு விவேக் ஓபராயின் பதில்கள்.
4. ”ஆபா”வின் காரணங்கள்
5. அமெரிக்கர்களின் தொழில் ஈடுபாடு.. (சாகப்போவது தெரிந்தும் மற்றவர்களைக் காக்க நினைத்த வீரம் Agent Hayes..)
இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக குறைசொல்ல முடியாது என்றாலும் 9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறி இருக்கிறது.
நண்பர்களுக்கு..
இந்த படம் பார்த்தால், ஏற்றுக்கொள்வீர்கள், வெறுப்பீர்கள், சில விவாதங்களில் குழப்பமடைவீர்கள், சில விவாதங்கள் சூடேற்றும். ஆனால் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
குர்பான் - தியாகம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




