சனி, 9 ஜனவரி, 2010

தமிழ் படம் - பாடல் விமர்சனம்

”தமிழ் படம்” என்று அழகிரி குடும்பத்திலிருந்து அடுத்த படம் வருகிறது..


”சென்னை 600028” புகழ் சிவா நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று கேட்டேன்.

புது இசையமைப்பாளர் கண்ணன் ரணகளம் செய்திருக்கிறார். படமும் பாடல்கள் போல் இருந்தால் 2010ம் முதல் மாபெரும் வெற்றிப்படமாய் அமையும்.

பாடல்கள் விமர்சனம் போகலாமா...??

முதல் பாடல் ஓ மகசீயா

ஹரிஹரன், ஸ்வேதாவின் தேன் குரல்களும், ரம்யமான இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. பாடல் வரிகள் எல்லாமே தமிழ்ப் படங்களில் வந்து நமக்கு புரியாத வரிகள் தான். ஆனால் பாடல் இனிமை..

இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ??

ஹம்சத்வானி ராகம் மெல்லியதாய் இழையோடுவதாகப் பட்டது. இசை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இரண்டாம் பாடல் குத்து விளக்கு

சும்மா குத்து குத்துன்னு குத்துறாங்க உஜ்ஜயினி.. என்னமா பாட்டுங்குறீங்க,.... மெல்லிய வீணையோட ஆரம்பிக்கும் போது நல்ல க்ளாசிக்கல் சாங்க்னு நினைச்சா சரியான குத்துப்பாட்டு. அந்த வீணை கூட தர்பாரி கனடாவா இருக்கலாம்.

மூனாம் பாட்டு பச்ச மஞ்ச செவப்பு தமிழன்

சும்மா விஜய் படத்து ஓபனிங்க் சாங்க் மாதிரி சல்லுனு ஏறுது... முகேஷ் பாடி இருக்காரு... பயபுள்ள கலக்கி இருக்காரு...எல்லா கலரும் சொல்லி நம்மளை சிரிக்க வச்சிடுறாங்க.. இதுக்கு நம்ம ஷிவா எப்படி ஆடப்போறாரோன்னு நினைச்சா காமெடியா இருக்கு..

சுனாமியோட பினாமி, ஏழைகளை ஏத்திவிடும் லிஃப்ட், மெதுவடை, தயிர்வடை தத்துவம்.. கலக்கி இருக்காரு பாடலாசிரியர்.. ;)

நாலாம் பாட்டு ஒரு சூறாவளி

எலெக்ட்ரிக் பேஸும் கித்தாரும் விளையாடி இருக்கு... இந்த சீன்ல காரை விட்டு கண்ணாடியோட ஷிவா இறங்கினார்னா எல்லாரும் கொல்லுனு சிரிச்சிடுவோம். சங்கர் மகா தேவன் கலக்கி இருக்காரு...

ஐந்தாம் பாட்டு தீம் மியூசிக்

என்ன காமெடின்னா ரொம்ப சீரியஸா இருக்கு இந்த தீம் மியூசிக். கலக்கலா இருக்கும் படத்தில..

மொத்தமா சொல்லணும்னா ஸ்பூஃப் வகை சினிமா தமிழ்ல அவ்வளவா இல்லை... சத்யராஜ் பண்ணி இருக்கார் ”மகா நடிகன்”ல.. ஆனா இந்த படம் முழு நீள நகைச்சுவையா இருக்கும்னு தோணுது..

கலக்குங்க மக்கா... இனிமே முட்டாள் தனமா படமெடுக்கிறவங்கல்லாம் பயப்படணும்.. முக்கியமா விஜய் அஜித் திருந்தணும்... ;)

4 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

கதையில் கடைசியில் வரும் ட்விஸ்டை மிகவும் ரசித்தேன்.

குசும்பன் சொன்னது…

one Day

குசும்பன் சொன்னது…

20:20

அகமது சுபைர் சொன்னது…

@ குசும்பன்,

நடத்துடே...!