வியாழன், 25 நவம்பர், 2010

மாமன் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
தென்னகத்து தேவதையே
தெள்ளமுது புன்னகையே
மண்ணகத்தில் வந்துதித்த
பெண்ணழகே கண்ணுறங்கு..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சின்னஞ்சிறு பூவெனவே
செல்லம்நீ வந்தனையோ
கன்னத்தி லெப்பவுமே
கண்ணீரும் வேண்டாமே..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
அப்பா ரடிச்சாலும்
அம்மாவேதும் சொன்னாலும்
மாமந்தான் நானிருக்கேன்
மருமகளே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
வெற்றிகள் எல்லாமே
வெள்ளமாய் வந்திடுமே
சுத்துப்பட்டு எல்லாமே

சத்தமாய் போற்றிடுமே

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
கட்டளைநீ கொடுத்தால்
காற்றுமுந்தன் காலடியில்
தலைமகளே கண்ணுறங்கு
தங்கமேநீ கண்ணுறங்கு...

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ


(தென்றல் குழுமத்தின் நண்பர் கந்தசாமி நாகராஜனின் மகளுக்கு நான் எழுதிய மாமனின் தாலாட்டு...)

கருத்துகள் இல்லை: