செவ்வாய், 22 ஜூலை, 2008

பலே பாலாஜி

காத்திருப்புகள் தான் ஒரு மனிதனை ஸ்திரமாக்குகிறது..உறுதியாக்குகிறது.

ஐ.பி.எல் போட்டியை காணும்போது சென்னை அணியினர் தோற்றுப்போய் விடுவோம் என்றே பயந்திருந்தேன். இதே போன்றொதொரு போட்டியில், ஷேன் வார்னின் அற்புதமான பேட்டிங் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தது நினனவிருக்கலாம். அதே போன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்.

வந்தார் பாலாஜி.. அழகான விவேகமான பந்துவீச்சில் எதிரணியை மிரட்டினாலும், ஆட்டத்தின் முக்கியமான கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் கொடுத்ததும் இதயத்துடிப்புகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்க ஆரம்பித்தது.

பாகிஸ்தான் அணிக்கெதிராக பேட்டிங் பிடித்து, சோய்ப் அக்தர் பந்தில் சிக்ஸர் அடித்ததும் தெறித்த பாலாஜியின் மின்னல் சிரிப்பு இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.

அவர் குறிப்பிட்ட இடத்தை தக்கவைக்க நெஹ்ரா, பதான், முனாஃப், R P சிங், போன்றோருடன் போராட வேண்டியிருந்தது.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். பாலாஜி விஷயத்திலும் அது நடந்தது. அவரின் முதுகுப்பகுதியின் பாதிப்பு காரணமாக அவர் கட்டாய ஓய்வெடுக்க பணிக்கப்பட்டார்.

2 ஆண்டுகள் ஓய்வுக்குப்பிறகு, மீண்டும் வந்தார்..மீண்டு வந்தார்.

சீயான் விக்ரம், சவ்ரவ் கங்குலி, பதான், சேவக் போன்றோர்கள் வரிசையில் பாலாஜியும் சேர்ந்திருக்கிறார். ஆம், காத்திருப்புகள் தான் ஒரு மனிதனை ஸ்திரமாக்குகிறது..உறுதியாக்குகிறது.

வெல்கம் பாலாஜி...

கருத்துகள் இல்லை: