ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

காதல் - தொடர்கிறது

பேருந்தின் இரைச்சலில்
தனியாய் கேட்டேன்
அவளின் கொலுசொலி.


நீ நனைவாய்
எனத்தான்
வருகிறது மழை

ஜன்னலோர இருக்கையில்
நீ பயணிக்கும் போதெல்லாம்
கூடவே பயணிக்கிறது மனம்

நீ வரும்போது
எதிரே வருகிறேன்
இன்றும் சிரிக்கிறாய்
அர்த்தம் தான்
புரிவதில்லை.

கருத்துகள் இல்லை: