புதன், 23 ஜூலை, 2008

திரை இசைப் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்

பாடல் : காதல் வைத்து காதல் வைத்து
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ்
வரிகள் : நா.முத்துக்குமார்

*காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்* //

காதல் என்பதை எப்படி வைத்திருக்க இயலும்??? அது பரிமாறப்பட வேண்டும்.. ஆனால் பரிமாறுதல் என்பதும் வாங்குபவர் இருந்தால் தானே சாத்தியம்..அதற்காக காத்திருக்கிறான் காதலன். காற்று, அனைத்து ஒலியையும் கடத்தும் ஊடகம். அதில் அவள் குரல் மட்டும் எப்படிக் கேட்கிறது.. வேறு எந்த சத்தமும் கேட்காமல்//

*சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்*

//காதலி சிரிக்கும் ஓசை காதலனுக்கு இசையை கற்றுக்கொடுக்கிறதோ?? அவள் நடக்கும் பாதை பார்ப்பதே அவனுக்கு திசையாகிறது. பள்ளியில் கிழியக்கூடாத இடத்தில் கிழிந்திருக்கும் டவுசரை ஊக்கு போட்டு மாட்டிவிட்டு, திசை பற்றி கையைக்கட்டிக்கொண்டு படித்த பாடம் மனநிழலில்.
"கதிர் முளைப்பது கிழக்கு
அதன் எதிர் இருப்பது மேற்கு" என்று..

இங்கே திசை காட்டும் காரணி சூரியன்.. அதுபோல் இந்த பாடலில் காதலனுக்கு காதலி...//

*காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்* *( காதல் வைத்து )*

*தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை* //

இந்த பாடலில் இந்த சந்தம் வரும் போது பாவனாவை அத்தனை அழகாக காட்டுவார்கள். இள மஞ்சள் நிற தாவணியில், தலைசூடிய மல்லிகையில் தேவதைதான்..

** *அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்* *( காதல் வைத்து )*

*உன்னை கண்ட நாள்
ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி*
*உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்* *( காதல் வைத்து )* *

//இந்த பாடலை கேட்கும் பொதெல்லாம் உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை உணர்கிறேன்.//

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Good.

priyamudanprabu சொன்னது…

சூப்பர்,,,,,,,,,,,,