சனி, 7 ஏப்ரல், 2007

தமிழ் புத்தாண்டு விழா - 2007

தமிழ் கலாச்சார கழகமும் (TCS), இந்திய தமிழ் கலைக் குழு (ITFAA) இணைந்து 05-ஏப்ரல் - 2007 அன்று நடத்திய "தமிழ் புத்தாண்டு விழா" நம்மை வியப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை.

என்னடா..சுபைர் யாரையும் பாராட்டி பேச மாட்டானே? என்ன இவனுக்கு வந்தது? எதுவும் கமிஷன் வாங்கிட்டானா?ன்னு முணுமுணுக்கிறது கேக்குது..
என்ன செய்யிறது... நல்லத பாராட்டித்தானே ஆகணும்.

எப்பப் பார்த்தாலும் மத்தவங்க லேட்டா வர்றாங்கன்னு குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட நான், இந்த விழாவுக்கு லேட்டா தான் போனேன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் லேட்டா போனேன். ஆனா அது தப்புன்னு சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டேன்.

லைட் மியூசிக்காம்..ஆனா அது ரொம்ப சூப்பரா இருந்திச்சு. ஜனனி அக்கா ஃபேன் ஆயிட்டேன். இன்னாமா பாடுதுன்றீங்க?. ஜனனிக்கா மட்டும் இந்தியால இருந்திருந்தா இந்நேரம் பெரியாளா வந்திருக்கும். இப்ப ஒன்னும் கெட்டுப்போயிடல. +2 முடிச்சுட்டு இந்தியா போறாங்கலாம். இது ரியாத் மக்களுக்கு இழப்பா இருந்தாலும், அவங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். ஜனனி அக்காக்கு "ஹை-பிட்ச்" வரலன்னு நினைக்கிறேன். பட்,
ரொம்ப நல்லா இருந்திச்சு.

கீ-போர்ட் வாசிச்ச "விக்னேஷ்" - நிச்சயம் 10 வருஷமாவது கத்துண்டிருக்கணும். அந்த "வசீகரா - மின்னலே" பாட்டுக்கு அவர் அடிச்ச பிட்...அப்பப்பா!..அவரும் பெரிய ஆளா வருவார். இந்த நேரத்தில இன்னும் ஒன்னு சொல்லணும், அந்த போக்கிரி பட பாட்டுல மைக் ரிப்பேர் ஆகிட "விக்னேஷ்"க்கு வந்ததே கோபம். அதெல்லாம் கலைஞனுக்கே உரித்தான கோபம்.

இதுக்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு தான் மத்தவங்க பாடினது. அதப் பத்தி நான் சொல்ல ஒன்னுமில்ல. அவங்க மாறினா நல்லது. அப்புறம் "அஸ்வினி"ன்னு யாரோ நல்லா பாடுவாங்களாமே? அவங்கள காணல..

இதுக்கப்புறம் வந்திச்சுப்பா.. டான்ஸ்.. இன்னாமா என்ஜாய் பண்ணுனேன் தெரியுமா?

முதல்ல பரதநாட்டியம், திருமதி. நிஷாமேனன் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ஆர்த்தியும், ஷில்பாவும் நல்லா ஆடினாங்க. இதுல ஷில்பா கொஞ்சம் மறந்திட்டாங்க. ஆனா ஆர்த்தி நல்லா ஆடினாங்க. இத சிறப்பான நாட்டியம் சொல்ல முடியாட்டியும், ரியாத் சூழலைப் பொறுத்த மட்டும் இந்த முயற்சி மிக சிறப்பானது.

அப்புறம் "யம்மாடி ஆத்தாடி (வல்லவன்)" பாட்டுக்கு ஆடினாங்க பாருங்க...காண கண்கோடி வேண்டும்.. அதே மாதிரி "முந்தி முந்தி வினாயகரே" பாட்டுல "பொய்க்கால் குதிரை" எப்படி அழகா வடிவமைச்சிருந்தாங்க தெரியுமா!..அந்த கலை இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

அதே மாதிரி, சென்னை செந்தமிழ் பாட்டுல "மறந்தேனே"ன்னு வர்ற இடத்துல என்ன அபிநயம். நெற்றிப் பொட்டிற்கருகில் விரல் காண்பித்து சுழட்டும் போது மிகச் சரியாக பொருந்தியது.

"குரு" படத்து பாட்டில் "ஐஸ்வர்யா" ஆடினது மாதிரியே "ஷிம்மி" ஆடினாங்க. அந்த பாட்ட வடிவமைச்சவங்க, படத்தில இருக்கிறது மாதிரி ஆடினா போதும்னு நினச்சிட்டாங்க போலிருக்கு. ஒரு கற்பனை வறட்சி அந்த பாட்டில இருந்தது.

அப்புறம் "ஸ்ரேயா" ஆடின மழை பட பாடல். அந்த குட்டிப் பொண்ணு என்னாமா ஆடினுச்சு. ஒரு சபாஷ்.

இத்தனை இருந்தும் பாராட்டிட்டு போனா மட்டும் போதுமா? குறை இருந்துச்சா?ன்னு கேட்டா, ஹ்ம் இருந்துச்சு. ஆட்டங்களுக்கு இடையில் மிகுந்த இடைவெளி. இதுக்கு குழந்தைங்க உடை மாத்திட்டு வரணும்னு சொன்னாலும், அங்கே ஒரு திட்டமிடலில் இருந்த குறைபாடு தான் பெரிசா தெரிஞ்சது. ஆனாலும் மூன்றே நாட்களில் இதை நடத்திக்காட்டிய "TCS & ITFAA" குழுவினர எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இன்னொரு குறை என்னான்னா மேடையில "TCS" போஸ்டர் மட்டும் தான் இருந்திச்சு. "ITFAA" போஸ்டர காணல.

இந்த விழா "சங்கமம்" தொலைக்காட்சியில "ஏப்ரல் 14" முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. "சங்கமம்" தொலைக்காட்சியை சவூதியில் "தமிழன்" தொலைக்காட்சியில் காணலாம்.

எது எப்படியோ, பாலைவனத்தில ஒரு பரவசம் இந்த விழா.

கருத்துகள் இல்லை: