சனி, 21 ஏப்ரல், 2007

இறைவணக்கம் - வெண்பாக்கள்

இறைவணக்கம்: குறள் வெண்பாக்கள்
*- அஹமது சுபைர் & ஹ.ஃபக்ருத்தீன்*

1). கண்ணின் கருவிழி காண்பவை தன்னிலாம்
எந்தன் நினைவில் இறை!

2). மண்ணில் பலருண்டு, மாண்போர் சிலர்தானாம்
எண்ணம் சிறந்திட ஏற்றம்.

3). தன்னின் நலத்தினை தானாக எண்ணாரும்
விண்ணில் உறைவோன் வழி!

4). எண்ணம் சிறக்கவும் ஏற்றம் கிடைக்கவும்
தன்னை அறிந்தே தொழு!

5). எண்ணம் நிறைவேற ஏகன் வரங்கிட்ட
கண்ணிலே நீர்வரக் கேள்.

6). இறையின் நினைவில் எதையும் செய்ய
குறையேதும் வந்திடா கேள்

7).இல்லையென்று கேட்பார்க்கு ஈயும் மனிதருக்கு
வல்லோன் அளித்திடும் வாழ்வு!

8). எல்லா நிலையிலும் எப்போதும் கொண்டிரு
வல்லோன் நவின்ற வழி.

9). மண்ணி லுறையும் மனிதர்க் கிரங்கிட
விண்ணின் உதவி வரும்!

10). கடலில் அலைகள் கணக்கிலும் போதா
அடங்கா நினைவில் அவன்.

கருத்துகள் இல்லை: