செவ்வாய், 26 செப்டம்பர், 2006

*கற்பனை!*

விடிந்தும் விடியாமலும் இருக்கும் மார்கழி மாத காலை வேளை.

கையில் கோலப் பொடியோடு அவள் பிரசன்னமாவதற்காக காத்திருந்தான் சூரியன்.
அவனுக்கும் முன்னாள் அடியேன்.
எந்த நாளிலும், எட்டு மணிக்கு முன்னாள் எழுந்திருக்காத நான், கொஞ்ச காலமாய் காலை 4 மணிக்கெல்லாம், புத்தகமும் கையுமாக இருப்பதை பார்த்தும் பார்க்காத மாதிரி இருப்பார் அம்மா...

அவள் அன்று பச்சை தாவணி உடுத்தி இருந்தாள். அன்று நான் பச்சை சட்டைக்காக, கடை ஏறி இறங்கியதை நாடறியும். அவளைத் தவிர.
பச்சை நிறம் பற்றி "வைரமுத்து" எழுதிய பாடல் எனது தேசிய கீதமானது அப்போது தான்.

அவள் கோலமிடும் அழகை பார்ப்பதற்காக காத்திருந்த சூரியன் சட்டென விழித்தெழுவான்.

"அய்யோ!..வெயில் அடிக்குது, சீக்கிரம் போகணும்" என தனக்குள் சொல்லிக்கொண்டே அவளின் விரல்கள் புவியில் நாட்டியமாடும்.

"அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டது எனக்குள் கேட்பது எப்படி?" இந்த கேள்வி எனக்குள் வந்த போதெல்லாம், "அவளே உனக்குள் இருக்கையில் அவள் மனதுடன் பேசியது எப்படி கேட்காமல் போகும்?" என்றே என் "அறிவு" பதில் தரும். (ச்சும்மா..அறிவு இருக்குன்னு ஒரு தற்புகழ்ச்சி!)

இப்படியாய் நாட்கள் சென்று கொண்டிருக்க, அற்புதமான வாய்ப்பு கிடைத்தது அன்று தான்.

அன்று அவளுக்கு கடைசி பரீட்சை. அன்று மட்டும் அவள் சற்று பயப்படுவதாகவே தெரிந்தது.

அவள் பள்ளிக்கு போகும் கடைசிப் பேருந்து சென்று விட்டிருந்தது. நான் நண்பனிடம் கடன் வாங்கிய மோட்டார் சைக்கிளில் அவள் கண்ணெதிரே போவதும் வருவதுமாய் இருந்தேன்.

அவளுக்கு புரிந்திருக்க வேண்டும், என்னை சைகை காட்டி அழைத்தாள்.
"என்ன ஸ்கூல்ல ட்ராப் பண்றீங்களா?" "Of Course".. (பொண்ணுங்கள மடக்குறதுக்கு English தான் மச்சி கரெக்ட்.)

அவள் என் பின்னால் அமர்ந்திருக்க, அன்று தான் நான் பிறந்ததாக உணர்ந்தேன். அவள் ஏதாவது பேசுவாளா? என்று என் மனம் துடிப்பதை அறிந்தவளாக, "நீங்க என்ன பண்றீங்க?" என்றாள்.

"நான் இஞ்ஜினியரிங் படிக்கிறேன் மெட்ராஸ்ல.."
"மெட்ராஸ் எப்படி இருக்கும்?"
"அது சூப்பரா இருக்கும்."
"சூப்பர்னா?" "பெரிய பெரிய சினிமா தியேட்டர், பெரிய பீச், அப்புறம் நிறைய.."
"ஓஹோ...அப்புறம், நீங்க நல்லா படிப்பீங்களா?" "ஆமா, இப்பவும் நான் தான் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்." (என்ன தைரியம்..? அவள் வந்தா கேட்கப்போறா.!)

அப்படியே பேசியபடி அவளை பள்ளியில் விட்டு வந்தேன்.
அன்று நான் தூங்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்து போனது.

இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஒரு திடீர் பிரளயம் நடந்தது அன்று.

தேதி கூட நினைவில் உண்டு.

அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஆக்ஸிடென்ட்டில் மொத்தமாக போய் விட்டனர்.

அவள் அழுது பார்த்தது அன்று தான். இதில் அவள் தவறு என்ன? எனக்கு புரியவில்லை.

ஆண்டவன் ஏன் இப்படி செய்தான்?. அவளை ராசி இல்லை என ஊர் ஒதுக்கியது.

நான் மட்டும் தைரியமாக அவளுடன் பேசுவேன். ஒரு நாள் அவளுடைய தந்தை என் அப்பாவுடன் சிறிது நேரம் பேசி விட்டு போனார்.

அன்றோடு அவர்கள் ரயிலேறி விட்டனர்.
இப்போது அவள் எப்படி இருப்பாள்? என்ன செய்து கொண்டு இருப்பாள்?

என் பேத்திக்கு அவள் பெயர் வைத்தது, அப்படியாவது அவளை கூப்பிடத்தானே?

இப்படியே எத்தனை காதல் மரித்துப் போயிருக்கும்?

பி.கு.: நான் இருக்கும் தெருவில் கோலம் போடும் வீடுகள் இல்லை, கல்யாண வயதில் பெண்களும் இல்லை. இப்படி எல்லாம் நடந்தால்..!

2 கருத்துகள்:

Raghavan alias Saravanan M சொன்னது…

"பெரும்பான்மையான காதல்கள்
பிற்காலத்தில் தங்கள் வாரிசுகளின் பெயர்கள் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன" - சரியா அப்துல்?

நல்லாயிருக்குங்க..

அகமது சுபைர் சொன்னது…

ரொம்பச் சரி...