செவ்வாய், 26 செப்டம்பர், 2006

*கனவுகள்!*


என்னை சில கனவுகள்
விரட்டி எடுக்கும்..
வாட்டியும் எடுக்கும்.

*முதல் கனவு..*
தூரத்தில் ஒருத்தி
ஓடி வருவாள்,
அவள் அருகில் வருகையில்
விழிப்பு வரும்.

*இரண்டாம் கனவு..*
நான் வீட்டில் இருக்க,
அம்மா எழுப்பி
காபி தருவார்.
விழித்தபின் நினைவு வரும்
இன்னும் இருப்பது சவூதியில்.

*மூன்றாம் கனவு..*
இதமான காற்றில்
சுகமான இசையில்
அழகான ஒளியில்
அன்னம் உண்பதாய்
அன்று தான் எனக்கு
மோர் கூட இருக்காது.

*நான்காம் கனவு!*
இதே சம்பளத்தை
இந்தியாவில் பெறுவதாய்..
அப்போது தான் நினைவு
வரும் வீட்டிற்கு தொலைபேச..


"கனவுகள் காண்பது நன்று"
கலாம் சொன்னார்.

அவர் கண்ட கனவுகளில்
ஒன்று கூட இதில் இல்லை
என்பது மட்டும் நிஜம்.

கருத்துகள் இல்லை: