செவ்வாய், 26 செப்டம்பர், 2006

வெண்பா

1. தாவணிப் பெண்களின் கெண்டை கொலுசும்
சுடிதார் மகளிர் சிரிப்புடன் - பூக்களின்
வாசம் முகம்பரவும் வெட்கம் அனைத்திலும்
மண்வாசம் வீசும் மரபு.

2. கன்னி கருவிழி கார்கூந்தல் அஃதனைத்தும்
இன்றேல் கவிஞர்தம் கண்ணீரின் கேள்விக்கு
பாட்டாய் வருமாம் நிலவு.

3. சினேகா சிம்ரன் திரிஷா கனாவர
நன்றாய் நிதமும் உறங்கு.

4. கண்ணே மணியே - திரிஷா எந்தன்
கவியின் மொழியாக, பூநின்னை எண்ணி
தினமும் வடிக்கிறேன் செய்யுளில் வெண்பா
படித்து அருகில் வா.

5. வேலையின்றி தெருபொறுக்கும் கணங்களில் - கையில்
அரிசிவாங் கபணமில்லை அடுப்பெரிக்க விறகில்லை
கடுப்பாய் அமர்ந்திருக்க அழைத்தனன் - நட்புடன்
வெண்பா வடிக்கலாம் வா.

கருத்துகள் இல்லை: